Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜூன் 2020|
Share:
1. வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
23, 23, 24, 22, ...

2. ஒரு கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் சேர்த்து மொத்தம் 60 பழங்கள் இருந்தன. ஆரஞ்சைப்போல ஆப்பிள்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு. மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் பழங்களின் தனித்தனி எண்ணிக்கை என்ன?

3. காலை 6.00 மணி துவங்கி மாலை 6.00 மணிவரை கடிகாரத்தின் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் எத்தனை முறை சந்தித்துக் கொள்ளும்?

4. ஆசிரியர் வைத்த ஒரு போட்டியில் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றார்கள். பரிசுப்பெட்டியில் $1521 பணம் இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையும், ஒவ்வொருவரும் பெற்ற தொகையும் ஒன்றுதான். அப்படியானால் மாணவர்கள் எத்தனை பேர், அவர்களுக்குக் கிடைத்த தொகை என்ன?

5. ராகேஷிடம் இருந்த சாக்லேட்டுக்களைப் போல இரண்டு மடங்கு லோகேஷிடம் இருந்தது. லோகேஷிடம் இருந்ததைப் போல இரண்டு மடங்கு யோகேஷிடம் இருந்தது. அவர்களிடம் இருந்த மொத்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை 56 என்றால், ஒவ்வொருவரிடமும் இருந்த சாக்லேட்டுக்கள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline