Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|அக்டோபர் 2019|
Share:
1. ஒரு வியாபாரி அவல் மூட்டையை 600 ரூபாய்க்கு வாங்கினார். அதை 700 ரூபாய்க்கு விற்றார். பின் அதை அவரிடமிருந்தே 800 ரூபாய்க்குத் திருப்பி வாங்கினார். இறுதியில் அதனை 700 ரூபாய்க்கு விற்றார். மொத்தத்தில் அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

2. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
1 + 4 = 5
2 + 5 = 12
3 + 6 = 21
8 + 11 = ?

3. பழ வியாபாரி ஒருவர் பெட்டிக்கு 30 பழம் வீதம் இரண்டு பெட்டிகளை எடுத்துப் போகிறார். வழியில் 30 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. பெட்டிக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் பழம் கொடுக்க வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை பழங்கள் மிஞ்சும்?

4. நான்கு பூனைகள், நான்கு நிமிடங்களில், நான்கு எலிகளைப் பிடிக்கின்றன என்றால் 12 பூனைகள், 12 நிமிடங்களில் எத்தனை எலிகளைப் பிடிக்கும்?

5. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் நுழைவுக் கட்டணமாக $5000 நிதி திரட்டப்பட்டது. ஆண்களுக்கு $3, பெண்களுக்கு $2, குழந்தைகளுக்கு $0.48 நுழைவுக் கட்டணம். நிகழ்வில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline