Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மேற்கு கனெக்டிகட்: தியாகராஜ ஆராதனை
BATS: கவியரங்கம், பட்டிமன்றம்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: திருக்குறள் போட்டிகள்
NETS: பொங்கல் விழா
இசை: மாளவிகா ஸ்ரீராம்
ஜாக்சன்வில்: பொங்கல் விழா
கேரலைனா தமிழ் சங்கம்: பொங்கல் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்
- ச. திருமலைராஜன்|மார்ச் 2013|
Share:
ஃபிப்ரவரி 17, 2013 அன்று மில்பிடாஸ் நகர சாய் கோவில் அரங்கில் பாட்டும் பரதமும் என்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கியது. சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை பத்மா மோகன் தொகுத்தளித்தார். வசந்தி வெங்கட்ராமன் கலைஞர்களைப் பாராட்டிப் பேசினார்.

நிகழ்ச்சியில் முதல் பகுதியில், தமிழிலக்கியங்களில் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை, மூத்த கர்நாடக சங்கீதக் கலைஞர் அஷோக் சுப்ரமணியன், ஹரி தேவ்நாத் ஆகியோர் இணைந்து பாடினார்கள். அரவிந்த் லஷ்மிகாந்தன் வயலினும், ரமேஷ் ஸ்ரீநிவாசன் மிருதங்கமும் வாசித்தார்கள். ஔவையார், நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன், அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்கள் முதல் திருக்குறள், தேவாரம், பெரியபுராணம் ஆகிய பாடல்கள் உட்பட இங்கே இன்புற ஒலித்தன. தமிழின் சாகித்யகர்த்தாக்களைக் குறித்த விரிவான உரையையும் அஷோக் சுப்ரமணியன் வழங்கினார். சிறந்ததொரு தமிழிசை நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.

தொடர்ந்து, பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை பிரபல நாட்டியக் கலைஞர்களான தீபா மஹாதேவன், ஸ்நிக்தா வெங்கட்ரமணி இருவரும் வழங்கினர். முதலில் நடனமாடிய ஸ்நிக்தா வெங்கட்ரமணி புஷ்பாஞ்சலி, சிவதாண்டவம், பராசக்தி ஜனனி, தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகியவற்றுடன் தில்லானா ஆடினார். அடுத்தது வந்த தீபா மஹாதேவன் ஜெயமூர்த்தி கவிதம், அஷ்டவித நாயகம், காளிங்க மர்த்தனம், திக்குத் தெரியாத காட்டில் ஆகிய பாடல்களுக்கு நடனமாடினர். இறுதியில் வாழிய நற்றமிழ் பாடலை இருவரும் இணைந்து நிகழ்த்தினர். பாரதித் தமிழ்ச் சங்கத்தின் மேடை வாயிலாக இசைப் பயணத்தைத் தொடங்கி, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் விருதைப் பெற்று தமிழ்த் திரைப் படங்களில் பின்னணிப் பாடகியாக வளர்ந்து வரும் பிரகதி குருப்ரசாத் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
More

மேற்கு கனெக்டிகட்: தியாகராஜ ஆராதனை
BATS: கவியரங்கம், பட்டிமன்றம்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: திருக்குறள் போட்டிகள்
NETS: பொங்கல் விழா
இசை: மாளவிகா ஸ்ரீராம்
ஜாக்சன்வில்: பொங்கல் விழா
கேரலைனா தமிழ் சங்கம்: பொங்கல் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline