Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜூன் 2011|
Share:
1. ராமு சைக்கிளில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தான். ஐந்தில் ஒரு பங்கு தூரத்தை அவன் கடந்தபோது மணி 10.02. பாதி தூரத்தைக் கடந்ததும் அவன் மணி பார்த்தபோது 10.50 ஆகி இருந்தது. அவன் கோயிலை எத்தனை மணிக்கு அடைவான்?

2. ராமுவிடம் ஐந்து பழங்கள் இருந்தன. சோமுவிடம் மூன்று பழங்கள் இருந்தன. ராஜுவிடம் பழங்கள் ஏதும் இல்லை. மிகவும் பசியாக இருந்ததால் மூவரும் அவற்றைச் சமமாகப் பங்கிட்டு உண்டனர். தான் உண்ட பழத்துக்காக எட்டு டாலர் கொடுத்த ராஜு, அதனை இருவரையும் தாங்கள் கொடுத்த பழத்திற்கேற்ப பிரித்து எடுத்துக் கொள்ளும்படிக் கூறினான். அவர்கள் எப்படிப் பிரித்துக் கொண்டிருப்பர்.

3. 1, 4, 5, 6, 7, 8, 9 இந்த எண்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கூட்டுத்தொகை 1111 வர வேண்டும். முடியுமா?

4. 6 ? 3 ? 5 ? 2 ? 4 = 4. இந்தச் சமன்பாட்டில் வினாக்குறி உள்ள இடங்களில் எந்தக் குறிகள் இருந்தால் மேற்கண்ட விடை கிடைக்கும்?

5. 1, 9801, 9, 9409, 25 ..... அடுத்து வரக்கூடிய எண் எது? ஏன்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline