Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|ஏப்ரல் 2010|
Share:
1. அது ஒரு மூன்று இலக்க எண். அதை இரண்டால் பெருக்கி, பெருக்குத் தொகையிலிருந்து ஒன்றைக் கழித்தால் அந்த மூன்று இலக்க எண்ணின் தலைகீழ் எண் விடையாக வருகிறது. அந்த மூன்று இலக்க எண் எது?

2. 121, 169, 225, .... வரிசையில் அடுத்து வரவேண்டியது எது, ஏன்?

3. அது ஒரு மூன்று இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 15. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் 15. ஒன்று மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 16 என்றால் அந்த எண் எது?

4. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அதில் முதலிலிருந்து எண்ணினாலும், இறுதியிலிருந்து எண்ணினாலும் பாபு 30வது ஆளாக நின்று கொண்டிருந்தான் என்றால், அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

5. ஒரு படகில் 21 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 20 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக் கொள்ள முடியும்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline