Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
- ஸ்ரீவித்யா மோகன்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஜூன் 20, 2009 அன்று கனெக்டிகட் ஆக்ஸ்போர்ட் உயர்நிலைப் பள்ளியில் செல்வி. லாவண்யா மாடபுசியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. லாவண்யா 8 வயது முதலே பரதத்தை ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருநாதன் ஆகியோரிடம் முறையாகப் பயின்றவர்.

வெங்கடரமணன் மாடபுசி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கீதா ரவிச்சந்திரன் மற்றும் வினய் மாடபுசியின் தொகுப்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் காயத்ரியின் விளக்கவுரைக்கு, லாவண்யா அபிநயித்து, விளக்கிய விதம் சிறப்பாக இருந்தது. முதலில் நாட்டியாஞ்சலியாக விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மீதான துதிகளுக்கு அழகாக ஆடினார். அடுத்து வந்த அம்புஜம் கிருஷ்ணாவின் ‘கண்ணன் மதுர கீதம்' (ஹம்சானந்தி), இறுதியாக வந்த ‘தாயே யசோதா' ஆகிய கீர்த்தனங்களின் போது அனைவரையும் அந்த கோகுலத்துக்கும் பிருந்தாவனத்துக்குமே அழைத்துச் சென்றுவிட்டார். தொடர்ந்து நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் திருமணத்தைச் சித்திரித்தார்.

‘இடது பதம் தூக்கி' (கமாஸ்) என்ற பாபநாசம் சிவன் பாடல் அருமை. அதில் திச்ர நடையில் அமைந்த சரணத்தில் ‘திருவடி சிலம்புகள் கலீர் கலீரென' என்ற வரிகளுக்கு லாவண்யாவின் பாதவேலை சோபித்தது. அடுத்து, ‘ஸ்ரீராமசந்த்ர கிருபாளு' (யமன் கல்யாணி) என்ற துளசிதாசரின் பாடலில் ராவண கும்பகர்ணாதிகளை ஸ்ரீராமர் வதம் செய்யும் காட்சியை அபிநயிக்கும்போது அவர் கண்களில் தெரிந்த ரௌத்ரம் கண்டோரைக் கவர்ந்ததது. பாடலின் இறுதி வரிகளில் தானே துளசிதாசராக மாறி திவ்யநாம சங்கீர்த்தனம் செய்து அவையோரைச் சேர்ந்து தாளம் போட வைத்தார்.
இறுதியாக நடனக் கலைஞர் தனஞ்சயன் இயற்றிய ஷண்முகப்ரியா ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் லாவண்யா. மாடபுசி தம்பதியினர் நன்றி உரையாற்றினார்கள். கல்லூரியில் படிக்கும் அவர்களின் மகன் வினய் மாடபுசி, தமிழில் நன்கு படிக்க, எழுத, பேச வல்லவராக இருப்பதுடன் நில்லாமல், தமிழ் இலக்கியத்தை ஆர்வத்துடன் வாசிப்பவராக இருப்பது குறிப்பிடத் தக்கது.

பாபு பரமேஸ்வரன் (குரலிசை), ரங்கநாதன் சேகர் (மிருதங்கம்), சுதாகர் மகாலிங்கம் (குழலிசை), வினோத் கே. மனா (வயலின்) ஆகியோரின் பக்கம் வெகு சிறப்பு.

ஸ்ரீவித்யா மோகன்
More

லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline