டாலஸ்: பொங்கல் விழா
ஜனவரி 31, 2015 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா பறை மற்றும் சிலம்பாட்டத்துடன் நடந்தது. சங்கத் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம் வரவேற்றார். பொருளாளர் தமிழ்மணி கமலநாதன் 2014ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். பின்னர் பறையிசை குறித்து Dr. ஜோ C. ஷெரினியன் (ஓக்லஹாமா பல்கலை) விளக்கவுரை அளித்தார். சார்லெட் ஜெய் சுப்ரமணியன் குழுவினரின் சிலம்பாட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் டாலஸ் நகர நடன ஆசிரியர்கள் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.

ஓவியம், சமையல், கோலம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நீயா நானா நிகழ்ச்சியை திரு. ராஜாமணி சுவைபட நடத்தினார். திருமதிகள் அன்னம், மணிமேகலை மற்றும் சித்ரா ஏற்பாடு செய்திருந்த தமிழோடு விளையாடு நிகழ்ச்சி உற்சாத்தைத் தந்தது. திருமதி. காயத்ரி ராம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.



© TamilOnline.com