தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு
'தென்றல்' முதன்மையாசிரியர் திரு. மதுரபாரதி எழுதிய 'ஸ்ரீ ரமண சரிதம்' ஒலிநூலாக வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற கல்கியின் வரலாற்றுப் புதினங்களுக்கு ஒலிநூல் வடிவம் கொடுத்த திரு. பாம்பே கண்ணன் அவர்கள் இதனையும் தயாரித்துள்ளார். இதனை ஃபிப்ரவரி 19, 2015 அன்று சென்னையில் 'அமுதசுரபி' ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட்டார். ஆன்மீகத்தின் உயரங்களை அடையும் வழியை எளிதாகப் போதித்த ரமண மகரிஷியின் வாழ்க்கை, போதனை ஆகியவற்றை இந்த ஒலிநூல் எளிய, இனிய தமிழில் சுவைபடச் சொல்கிறது.

ஸ்ரீ ரமண சரிதம் ஒலிநூலை வாங்க விரும்புவோர் thendral@tamilonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 'Ramana Charitam' என்பதைப் பொருளாகக் கொடுத்து எழுதுங்கள். விலை $6 மட்டும். புதிதாகத் தென்றலுக்குச் சந்தா செலுத்தி இலவசமாகப் பெறலாம்.



© TamilOnline.com