பிரியம்
சாப்பாடு இறங்கவில்லை
கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள்.
எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி
குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில்
பசி மறந்தது எங்களுக்கும்.

'நன்கு வாழ்ந்தாயிற்று
அமைதியாகக் கழியட்டும் கடைசி நிமிடங்கள்'
அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறிச் சென்றார்கள்.

மருந்து வாங்கிவர வாசற்கதவைத் திறந்ததும்
விருட்டெனக் கழுத்தை நிமிர்த்தி
விழிகளில் சக்தியைத் திரட்டி
'போய்வா, பார்த்துக்கொள்கிறேன்' என்பதாக
வால் ஆட்டுகிறவளின் அன்புக்குமுன்
தோற்று நிற்கிறது
எங்கள் பிரியம்.

படம், கவிதை: ராமலக்ஷ்மி

© TamilOnline.com