BKM: பொங்கல் விழா
ஜனவரி 18, 2015 அன்று ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. சுமார் 225 குழந்தைகளின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் காண்போர் உள்ளங்களைக் கொள்ளைகொண்டன. அரங்கத்திலிருந்த 600க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். மன்றத்தின் சென்ற ஆண்டுத் தலைவர் திரு. பார்த்தா கிருஷ்ணஸ்வாமி இவ்வாண்டுத் தலைவர் திரு. ஸ்ரீதரை வரவேற்றுப் பேசினார். விழாவில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெற்றோர் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கடும் முயற்சியில் கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

ஸ்ரீவித்யா ஸ்ரீதர்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com