மூணே மூணு வார்த்தை


நீண்ட இடைவெளிக்குப் பின் மதுமிதா இயக்கும் படம் 'மூணே மூணு வார்த்தை'. அர்ஜுன், வெங்கி, அதிதி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை எஸ்.பி.பி. சரண் தயாரிக்கிறார். "தரமான படங்கள் தயாரிக்க வேண்டுமென்பதுதான் என் லட்சியம். நல்ல தரமான, வித்தியாசமான இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு அதே மாதிரியான வித்தியாசமான கதைகளில் பேரார்வம் உண்டு. என்னுடைய படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். வர்த்தகரீதியில் வெற்றி பெறுவதிலும், விமர்சகர்களின் பாராட்டை பெறுவதிலும் எனது படங்கள் முதன்மையாக இருக்கும்." என்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு கார்த்திகேய மூர்த்தி என்ற புதுமுகம் இசையமைக்கிறார். ஐ லவ் யூ, சரண்.

அரவிந்த்

© TamilOnline.com