ஓ.கே. கண்மணி
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மா நாயகனாக நடிக்கும் படம் ஓ.கே. கண்மணி. நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நடிக, நடிகையர்கள் நடிக்கும் இப்படம் அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிவரும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இயக்கம், வேறு யார், மணிரத்னம்தான். பிப்ரவரியில் காதலர் தினத்தன்று படம் வெளியாக இருக்கிறது. ஓகே, ஓகே.



அரவிந்த்

© TamilOnline.com