BATM: குழந்தைகள் தினவிழா
நவம்பர் 8, 2014 அன்று குழந்தைகள் தினவிழாவை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஹேவர்ட் நகரத்தின் சாபோத் அரங்கத்தில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. குழந்தைகளின் பேச்சுப்போட்டி, ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் இடம்பெற்றன. இவ்வாண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக Bay Area Super Singer அமைந்திருந்தது.

திரு. சோலை அழகப்பன் 2014ம் ஆண்டு தமிழ்மன்ற செயற்குழு உறுப்பினர்களையும், தொண்டர்களையும் அறிமுகப்படுத்திச் சிறப்பித்தார். பின்னர் 2015ம் ஆண்டின் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈட்டிய நிதி தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கியப் பாடகர்களான AR. ரெஹனா, சுரேஷ் பீட்டர்ஸ், அல் ருபியான் ஆகியோர் வசந்த் வசீகரன் (நியூ ஜெர்ஸி) இசைக்குழுவினருடன் பாடி, மகிழவைத்தனர்.

விழாவுக்கு நிதி உதவிய தொழிலதிபர் திரு. ராஜேஷ் சுப்ரமணியம் பரிசு பெற்றோருக்குச் பரிசு தந்து கௌரவித்தது மேலும் சிறப்பு.

கணேஷ் பாபு,
ஹேவர்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com