கத சொல்லப் போறோம்


குழந்தைகளின் உளவியலை மையமாக வைத்து உருவாகி வருகிறது 'கத சொல்லப் போறோம்'. அனாதை ஆசிரம மாணவ, மாணவிகளுக்கும், அருகிலுள்ள வசதியான பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் படத்தின் கதை. கூடவே குழந்தைத் திருட்டையும், அதனால் பெற்றோர்கள் படும் வேதனையையும் மிக உணர்ச்சிகரமாக இதில் பதிவு செய்திருக்கிறார்களாம். குழந்தை நட்சத்திரங்களாக அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், அர்ஜுன், ஷிபானா, ரவீணா, சாமு போன்றோரும், முக்கிய கதாபாத்திரங்களாக ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி, பசங்க சிவகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பவன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ். கல்யாண்.

அரவிந்த்

© TamilOnline.com