விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா
செப்டம்பர் 6, 2014 அன்று அன்னை வேளாங்கண்ணித் திருவிழா நடந்தேறியது. மாலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி அருட்தந்தை அந்தோணி, அருட்தந்தை கிறிஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. திருப்பலியில் பல்வேறு மொழிகளில் திருப்பாடல்கள் பாடினர். அன்னையின் பக்தர்கள் சாட்சிகள் மூலம் அவர்களது விசுவாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்தினர். திருப்பலியில் மந்திரிக்கப்பட்ட புனிதநீரும், புனித எண்ணெயும் வழங்கப்பட்டன. அன்னையின் சப்பரப் பவனி நானூறுக்கு மேற்பட்ட பக்தர்களுடன் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபமாலையுடன் நடைபெற்றது. திருவிழாவின் இறுதியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக் காட்சி இருந்தது.

மேல் விவரங்களுக்கு: www.bavs.org

ஜான்சன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com