தர்பார் ஃபைன் ஆர்ட்ஸ்: விஜயலட்சுமி சுப்பிரமணியம் கச்சேரிகள்
தர்பார் ஃபைன் ஆர்ட்ஸின் ஆதரவில் திருமதி. விஜயலட்சுமி சுப்ரமணியம் அவர்களின் கச்சேரிகள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் பின்வரும் இடங்களில் நடக்கவிருக்கின்றன.

அக்டோபர் 4, 2014 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ சத்யநாராயண சுவாமி கோவிலில் (475, Los Coches Street, Milpitas, CA) நடைபெறும். இது தியாகராஜர், அன்னமய்யா, பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் கீர்த்தனைகள் அடங்கிய தெலுங்கு சிறப்பு நிகழ்ச்சியாக இருக்கும்.

அக்டோபர் 12, 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு The Mountain View Center for the Performing Arts-Second Stage (500 Castro St., Mountain View, CA) அரங்கத்தில் நடைபெறும்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் திரு. வி.வி.எஸ். முராரி வயலினும், பூவாளூர் ஸ்ரீஜி மிருதங்கமும் வாசிப்பர்.

விஜயலட்சுமி சுப்ரமணியம் கால் நூற்றாண்டுக்கு மேல் கர்னாடக சங்கீதத்தில் இயங்கிவரும் குறிப்பிடத்தக்க கலைஞர் ஆவார். ஆழ்ந்த புலமையோடு பாவனை நிறைந்த இசையைத் தனித்துவமான சௌந்தர்யக் குரலில் வெளிப்படுத்துவதில் இவர் வல்லவர். இவர், தமிழ் மற்றும் க்ஷேத்திரம் இசைகளில் சிறப்பு ஆராய்ச்சி செய்துள்ளார். 2013ல் விரிகுடாப் பகுதியில் இவர் 'நாதயோகி தியாகராஜா' என்ற விளக்கச் சொற்பொழிவும், தமிழிசைப் பாடல்கள் பட்டறையும் நடத்தியுள்ளார்.

இவரைப்பற்றி மேலும் அறிய: vijayalakshmysubramaniam.com

2013ம் ஆண்டில் கர்நாடக இசை, இந்துஸ்தானி, நடனம் மற்றும் நாடகக் கலைகளை ஊக்குவிக்க, தர்பார் ஃபைன் ஆர்ட்ஸ் தொடங்கியது. அமைப்பின் உரிமையாளர்கள் ரமேஷ் சுப்ரமணியம், சுஜாதா ரமேஷ் மற்றும் நிஷேவிதா ரமேஷ். கோமதி பாலா, பாட் கிருஷ்ணன், ஹரிணி ராமகிருஷ்ணன் ஆகியோர் இதற்குப் பங்களிக்கின்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com