தென்கலிஃபோர்னியா: வேளாங்கண்ணி மாதா திருவிழா
செப்டம்பர் 13, 2014 சனிக்கிழமையன்று மதியம் 2:00 மணிக்கு வேளாங்கண்ணி மாதா திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கும். மாதா ஜெபமாலை, ஊர்வலம் ஆகியவற்றை அடுத்து மாதா சிலை தேவாலயத்திற்குக் கொண்டுவரப்படும்.

திருப்பலி 3:00 மணிக்கு கும்ப ஆராதனையுடன் தொடங்கும். அருள்தந்தை ஆல்பர்ட் பிரகாசம் அவர்கள் ஒன்பது சக அருள்தந்தையருடன் திருப்பலி வழிபாட்டை நடத்துவார். திருவழிபாடு ஆங்கிலத்தில் நடத்தப்படும். சில பாடல்கள் தமிழில் பாடப்படும். இறுதிப் பாடல் பல இந்திய மொழிகளில் பாடப்படும். வழிபாட்டின்போது மக்கள் ஆசீர்வாதம் பெறலாம்.

ஆராதனைக்குப் பின் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். இசை, நடனம் உட்பட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பிறகு பாதிரியார்களுக்குப் பொன்னாடை வழங்கப்படும்.

விழா நடத்துவதில் உதவப் பத்து வயதுக்கு மேற்பட்ட தொண்டர்கள் தேவை.

பதிவுசெய்ய: திருமதி. மேகலா - தொலைபேசி எண் 310.972.9973.
முகநூல்: facebook.com/velankannisocal
பங்கேற்போர் மின்னஞ்சல் velankannisocal@gmail.com மூலம், செப்டம்பர் 5ம் தேதிக்குள் தெரியப்படுத்தவும்.

நன்கொடை மற்றும் காணிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. காசோலை தருவோர் "Divine Saviour Catholic Church" என்ற பெயரில் தரவும். அதில் மெமோ வரிவகை "Velankanni" என எழுதவும். நன்கொடை அனுப்ப முகவரி: 610 Cypress Ave., Los Angeles, CA 90065, ATTN: Fr.Albert.

தகவல்: சேவியர்;
தமிழில்: மீரா ராமச்சந்திரன்

© TamilOnline.com