கல்கண்டு
நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கல்கண்டு. நாயகியாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். இவர்களுடன் டி.பி. கஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், "டாடி எனக்கொரு ஒரு டவுட்டு" புகழ் செந்தில், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை யுகபாரதி, மதன்கார்க்கி, விவேகா, அண்ணாமலை ஆகியோர் எழுத, கண்ணன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி A.M. நந்தகுமார் இயக்குகிறார். "கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம் கூட மாற்றம் இருக்காது. அதுமாதிரி திரைக்கதை வடிவத்தில் கல்கண்டு எல்லாத்தரப்பு மக்களும் கல்கண்டை ரசிக்கும்படி இருக்கும்" என்கிறார் இயக்குனர். கல்கண்டு கசக்குமா என்ன?



அரவிந்த்

© TamilOnline.com