'பார்த்திபன் கனவு' ஒலிநூல் வெளியீடு
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற கல்கியின் மிகவும் நேசிக்கப்படும் வரலாற்றுப் புதினங்களை ஒலிநூலாக வெளியிட்ட திரு. பாம்பே கண்ணன் (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், ஜூலை 2014) இப்போது 'பார்த்திபன் கனவு' நாவலை ஒலிநூல் ஆக்கியிருக்கிறார். இதன் வெளியீடு ஆகஸ்ட் 7, 2014 அன்று சென்னையில் நல்லி குப்புசாமி செட்டியார், இந்திரா சௌந்திரராஜன், வைஜயந்திமாலா பாலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

காதல், சூழ்ச்சி, வீரம், சோகம் என்று பல ரசங்களையும் உள்ளடக்கிய இந்தச் சுவையான நாவலை உணர்ச்சி ததும்பும் 12 மணிநேர ஒலிப்புத்தகம் ஆக்கியதில் இருபது கலைஞர்களின் குரல்களுக்குப் பங்குண்டு. காரில் சென்றபடியே கேட்டு ரசிக்க இசைவான இந்த ஒலிநூலை வாங்க விரும்பிவோர் தொடர்புகொள்க: bombaykannan@hotmail.com



© TamilOnline.com