சதாபிஷேகம்
காசி வெங்கட்ராமன் சிவகாமசுந்தரி தம்பதியருக்கு சதாபிஷேகம் சான் ஹொசேவில் வசிக்கும் அவர்களது மகன் சிவகுமார் இல்லத்தில் 2014 ஆகஸ்ட் 16 அன்று நடந்தேறியது. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை தொடர்ந்து மறுநாள் சதாபிஷேகம் நடந்தது. 15 வேத விற்பன்னர்கள் ஏகாதச ருத்ரம் ஜெபிக்க இந்தியாவில் நடப்பதுபோல முறைப்படி நடந்தது. தொடர்ந்து தம்பதி பூஜையும் நடைபெற்றது. காசியில் வசித்துவரும் இவர்கள், அவர்கள் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற இங்கு வந்து சதாபிஷேகத்தை நடத்திக்கொண்டனர். அவர்களது பெண் லதாவும் இதற்காக பஹ்ரைனில் இருந்து வந்திருந்தார்.

சுப்பிரமணியன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com