மணல் நகரம்


இந்தியாவிலிருந்து பிழைப்பிற்காக துபாய் செல்கிறார்கள் மூன்று நண்பர்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பேதம் மறந்து ஒரே அறையில் ஒன்றாகத் தங்கிவாழும் அவர்கள், எதிர்பாராத சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்கின்றனர் அவர்கள் அதிலிருந்து மீள அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களை விறுவிறுப்பாகச் சொல்கிறது மணல் நகரம். முழுக்க துபாயில் படமாகியுள்ள இதில் பிரஜின் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தனிஷ்கா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக துபாயில் பிறந்து வளர்ந்த வருணா ஷெட்டி நடிக்கிறார். இசை: ரெனில் கௌதம். 'ஒருதலை ராகம்' படத்தில் அறிமுகமாகி, 200 படங்களுக்குமேல் நடித்துள்ள சங்கர், இப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் பல படங்களை இயக்கியிருக்கும் சங்கர், தமிழில் இயக்கும் முதல் படம் இது என்கிறார் கோலிவுட் குருவியார். முதல் படம் முத்திரைப் படமாக இருக்கட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com