பாலாஜி கோவில்: உத்சவ மூர்த்தி ஸ்தாபனம்
2014 மே 30 முதல் ஜூன் 1 வரையிலான நாட்களில் சான் ஹோசே பாலாஜி திருக்கோவிலில் துவஜஸ்தம்பத் துவக்கமும், உத்சவ மூர்த்தி ஸ்தாபனமும் பீடாதிபதி ஸ்ரீ சுவாமி நாராயணானந்த புரி அவர்களின் வழிகாட்டலில் விமரிசையாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு ஸ்ரீ கணபதி பூஜை, புண்யாகவாசனம், லக்ஷ்மிநாராயணர் மற்றும் சர்வதேவதா ஹோமங்களும் நடத்தப்பட்டன. மே 31ம் தேதி மாலை திரு. விஜய் சவ்வா மற்றும் திருமதி. உமா ஈஸ்வர் வழங்கிய இந்திய இசை மற்றும் நடனங்கள் அடங்கிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஜூன் 1ம் தேதியன்று இந்தியக் கான்சல் ஜெனரல் திரு. நாகேஷ்ராவ் பார்த்தசாரதி அவர்களும் சுவாமி நாராயணானந்த புரி அவர்களும் துவஜஸ்தம்பத்தைத் துவக்கி வைத்தனர். அவ்வமயம் திருமதி. பார்த்தசாரதி, திரு. தவே கோர்ட்டிஸ் (சான்ட கிளாரா கண்காணிப்பாளர்), திரு. ஆஷ் கால்ரா (சான் ஹோசே நகரக் கவுன்சில் உறுப்பினர்), திருமதி. அனு நடராஜன் (ஃப்ரீமான்ட் நகரத் துணை மேயர்), திரு. ஜோஸ் எஸ்டீவ்ஸ் (மில்பிடாஸ் நகர மேயர்) ஆகியோர் வந்திருந்தனர்.

திரு. விஜய் சவ்வா வரவேற்புரை வழங்கினார். திரு. மஹேஷ் நிஹலானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திரு. பிரபு கோயல் நன்றி நவின்றார். இந்தத் திருக்கோவில் இருக்கும் முகவரி: 5004 North First St., San Jose, CA 95002.

தொடர்பு கொள்ள:
வலைமனை - www.balajitemple.net
தொலைபேசி - 408-203-1036

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com