தல்சா: மகாலட்சுமி ஆலய ஆண்டு விழா
ஜூன் 9, 2014 அன்று தல்சாவில் (ஓக்லஹோமா) உள்ள ஶ்ரீமகாலட்சுமி ஆலயத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆலயத்தின் பாலவிகாஸ் குழந்தைகள் கண்ணைக் கவரும் கடவுளராகத் தோன்றி பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இளம் இசைக்கலைஞர் திரு.கிஷான் ஶ்ரீகாந்த் அவரின் கர்நாடக இசைக் கச்சேரி சிறப்பாக இருந்தது. அவருக்கு பக்கபலமாக திருமதி. சீதா (வயலின்), திரு. ஶ்ரீநிவாசன் பொன்னப்பன் (மிருதங்கம்) மற்றும் திருமதி. ராஜலட்சுமி (வீணை) ஆகியோர் வாசித்தனர். வந்திருந்தோருக்குச் சிறப்பான இந்திய உணவுகள் வழங்கப்பட்டன. தல்சாவில் இத்தனை பிரமிக்கத்தக்க கோவிலைக் கட்டியோருக்கும், விழா ஏற்பாடுகளைச் செய்த தல்சா இந்து ஆலயத்தினருக்கும் அளவற்ற நன்றி.

வைத்தியநாதன் சுப்ரமணியன்,
தல்சா, ஓக்லஹோமா

© TamilOnline.com