எவன்


காதலன், காதலியைச் சேர்த்து வைக்கப் பிறர் போராடுவதாகத்தான் பெரும்பாலான படங்கள் இருக்கும். ஆனால் இங்கே பிரிந்திருக்கும் தாய், மகனைச் சேர்த்து வைக்கப் போராடுகிறார் காதலி. தாயும் மகனும் ஏன் பிரிந்தார்கள், காதலியின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதைச் சொல்ல வருகிறது 'எவன்'. திலீபன் புகழேந்தி நாயகனாக அறிமுகமாகிறார். இவர் பாடலாசிரியர் புலமைப்பித்தனின் பேரன். நாயகியாக தீப்தி மானே நடிக்கிறார். பிரபல பின்னணிப் பாடகி உஜ்ஜெய்னி ராய் நாயகனுக்கு அம்மாவாக நடிக்கிறார். கே.எம். துரைமுருகன் இயக்கும் இப்படத்திற்கு புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுத, சசிதரன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com