நாகர்கோவில் சந்திப்பு


பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் ஒழுங்காகப் படிக்காமல், அக்கறையில்லாமல், எதிர்காலச் சிந்தனையற்று இருகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட ஆசிரியை சுகன்யா அவர்களைத் திருத்த முயல்கிறார். அது பிடிக்காத மாணவர்கள் சுகன்யாவை மாடியிலிருந்து கீழே தள்ளி விடுகிறார்கள். சுகன்யா என்ன ஆனார், அந்தக் குற்றத்திலிருந்து அம்மாணவர்கள் தப்பித்தார்களா, அவர்கள் வாழ்க்கை எப்படித் திரும்புகிறது என்பதைச் சொல்ல வருகிறது 'நாகர்கோவில் சந்திப்பு'. ஜோதிகிருஷ்ணா, சுகன்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை ராஜ் பாஸ்கர். எழுதி இயக்குகிறார் ஜி.ஜீ. அசோகன். காலத்துக்குத் தேவையான கதைதான்.

அரவிந்த்

© TamilOnline.com