விரிகுடாப் பகுதி: ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்
விரிகுடாப் பகுதி கத்தோலிக்கத் தமிழ் சமூகம் தங்களின் ஈஸ்டர் மகிழ்வுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அருளாளர் அன்னை தெரசாள் கன்னியர் அமைப்பான மிஷினரீஸ் ஆப் சேரிட்டி நடத்தும் வீடற்றோர் தங்குமிடம் (St. Anthony of Padua Church Homeless Shelters, San Francisco) சென்று தன்னார்வத் தொண்டு செய்ததோடு, உணவுப் பொருள்களும், நன்கொடையும் வழங்கி மகிழ்ந்தனர்.

சிறு செபத்துடனும், நற்செய்திப் பகிர்வுடனும் ஆரம்பித்த இப்பகிர்வு, உணவுக்கு முன் குழந்தைகளின் பாடல்களோடு தொடர்ந்தது. இதில் கலந்துகொண்ட குடும்பத்தினர், குறிப்பாகக் குழந்தைகள், வீடற்ற அன்பர்களுடன் நடந்த இந்த அன்பின் பகிர்தலின் மகிழ்வை மனதில் தாங்கி, நெஞ்சம் நிறைந்தவர்களாய் விடைபெற்றனர்.

விரிகுடாப் பகுதி கத்தோலிக்க தமிழ் சமூகம் 2003 முதல் கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மௌண்டன் வியூவிலுள்ள புனித ஜோசஃப் தேவாலயத்தில் தமிழ் திருப்பலி கொண்டாடி வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: www.TamilCatholic.org.

விரிகுடாப் பகுதி தமிழ் கத்தோலிக்க சமூகம்

© TamilOnline.com