விருக்‌ஷா: 'வேற்றுமையில் ஒற்றுமை'
மே 10, 2014 அன்று, 'விருக்‌ஷா' இளைஞர் அமைப்பு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருத்தில் ஓர் இசைநிகழ்ச்சியை நடத்தியது. இதில் திரு. நசிகேத சர்மா, திரு. ரவி குட்டாலா, திரு. ரவீந்திரபாரதி

ஸ்ரீதரன், திருமதி. ரமா தியாகராஜன், திருமதி. காயத்ரி சத்யா ஆகிய குருநாதர்களின் பள்ளி மாணவர்கள் தனித்துவம் வாய்ந்த அற்புத இசை விருந்தைப் படைத்தனர். விருக்‌ஷா 'இளைஞர்களால்,

இளைஞர்களுக்காக (For the youth, by the Youth) என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் செல்வி. மாளவிகா ஸ்ரீராம், ரிஷிகேஷ் சாரி, ரஞ்சனி ரவீந்திரபாரதி, அபர்ணா

தியாகராஜன், விக்னேஷ் தியாகராஜன், அமித் ரங்கநாதன், அக்‌ஷய் வெங்கடேசன் ஆகியோர் இணைந்து இசைத்த ஸ்ரீ லால்குடி ஜெயராமனின் தில்லானா நிகழ்ச்சியின் மணிமகுடம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். மங்களம் ஸ்ரீனிவாசனும், க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனா புகழ் திரு வி.வி. சுந்தரமும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருக்‌ஷாவையும், அன்றைய நிகழ்ச்சியையும் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் செல்வி. ஷ்ரேயா வெங்கடேசன்.

வசந்தி வெங்கடராமன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com