அருண்குமார் நடிப்பில் 'வேதா'
நிரண் கிரியேஷன்ஸ் இன்டர்நேஷனல் என்ற புதிய படநிறுவனம் 'வேதா' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

அருண்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஷீலா நடிக்கிறார். இப்படத்தில் அருண்குமார் தன் பெயரை அருண்விஜய் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இரண்டாவது கதாநாயகனாக ஜெரோவதன் நடிக்கிறார். இவர் தமிழக காவல்துறை உயரதிகாரி சரப்ஜித்சிங் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சீதா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையை கவனிக்கிறார். நா. முத்துக்குமார், யுவபாரதி, வெற்றிவேல் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கதை, திரைக்கதையை வாசு பாஸ்கர் கவனிக்க, வசனம் மற்றும் இயக்கத்தை எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர். நித்தியகுமார் கவனிக்கிறார். வருகிற நவம்பர் மாதம்

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவிருக்கின்றன. பாடல்காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com