நிருத்ய நிவேதன்: ஆனந்த நிருத்யம்
ஜூன் 15, 2014 ஞாயிறு மாலை 3.45லிருந்து 6.00 மணி வரை சீரடி சாய் பரிவார் அரங்கில் 'ஆனந்த நிருத்யம்' (Dance of Joy) என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சியை சான்ஹோஸே நிருத்ய நிவேதன் பள்ளியின் இயக்குநர் திருமதி. புவனா வெங்கடேஷ் வழங்க இருக்கிறார்.

ஆனந்த நடனம் என்பது பேரானந்தத்தைத் தெய்வீக நடனமான பரதத்தின் மூலம் அனுபவிப்பது. ஆனந்தமே ஆன்மாவின் அடிநாதம். எங்கும் நிறைந்த பரப்பிரம்மான இறைவனின் நிலை பேரானந்தமாகும். அவ்விறைவனை நடனத்தின் மூலம் போற்றுதலே ஒருவர் சரீரத்தினால் அடையும் உண்மையான பேரானந்தம். இதுவே பரதக் கலையின் உண்மையும் மகத்துவமும் ஆகும். இதனைத் தனக்கு உணர்த்திய தன் குருவான பிரபா நாகராஜன் அவர்களுக்கு இந்நிகழ்ச்சியை அர்ப்பணிக்கிறார் நடன இயக்குநர்.

இதில் முதன்மை மாணவியான ஹர்ஷிதா வெங்கடேஷ் மற்றும் பலர் தங்கள் மகிழ்ச்சியினை நடனத்தின் மூலம் பகிர உள்ளார்கள்.

மேலும் தகவலுக்கு
வலைமனை: www.nrithyanivedhan.com
முகநூல்: fb/Nrithyanivedhan
மின்னஞ்சல்: lalithkala_sj@yahoo.com

கீதா கண்ணன்

© TamilOnline.com