மெல்லிசை


விஜய்சேதுபதியின் அடுத்த படம் "மெல்லிசை" காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். "நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை இது. இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக, வாழ்கிறோம் ஆனால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பதுதான் இந்த கதையின் கரு. இந்தப்படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள், அதனால் படத்திற்கு மெல்லிசை என்று பெயர் வைத்துள்ளோம்" என்கிறார் இயக்குநர். சாம் சி.எஸ். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மெல்லிசை.

அரவிந்த்

© TamilOnline.com