சிகாகோ: வசந்தகால இசை நிகழ்ச்சி
ஏப்ரல் 24, 2014 அன்று, AID அமைப்பின் சிகாகோ பிரிவு 'வசந்தகால இசை நிகழ்ச்சி' ஒன்றைச் சிகாகோ மாநகரின் லெமான்ட் இந்து ஆலயத்தில் நடத்த உள்ளது. இது அவ்வமைப்பு ஆதரிக்கும் Eureka Superkidz திட்டத்துக்கு நிதி திரட்டுமுகமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. வசந்தத்தின் வருகையை ஒட்டியும் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையிலும் நடக்கும் இவ்விசை விழாவில் சிகாகோ பகுதியின் பிரபல பாடகர்களான ரமா ரகுராமன், பூபேந்திர சிங், பவித்ரா ஆனந்த் ஆகியோர் பங்கேற்பர்.

இந்தியாவெங்கிலும் நூற்றுக்கணக்கான கல்வி, மருத்துவம் மற்றும் வளர்ச்சிப் பணித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் Association for India's Development (AID) ஒரு லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனம் ஆகும். கிராமங்களின் ஏழ்மை நிறைந்த குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள் தமது ஆற்றலின் முழுச் சிறப்பை எட்டுவதற்கு உதவுகிறது யுரேகா சூபர்கிட்ஸ் திட்டம்.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டு வாங்க: https://secure.aidindia.org/pages/events/SMC14Chi
இத்திட்டத்தின்கீழ் ஒரு கிராமத்தை தத்தெடுக்க: eureka.aidindia.in/donate.php

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com