கணிதப் புதிர்கள்
1. 14, 28, 20, 40, 32... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரு பண்ணையில் சில பறவைகளும் மிருகங்களும் இருந்தன. அவற்றின் தலைகளின் மொத்த எண்ணிக்கை 42. கால்களின் எண்ணிக்கை 160. அப்படியென்றால் மிருகங்கள் எத்தனை, பறவைகள் எத்தனை?

3. A என்பவர் Bயின் மகன். B, C இருவரும் சகோதரர்கள். C யின் தாய் D ஆவாள். Dயின் மகள் E. Eயின் மகள் x . என்றால் x க்கு A என்ன உறவு?

4. ஒரு காட்டில் சில மாமரங்கள் இருந்தன. பழத்தைத் தின்னும் ஆசையில் சில கிளிகள் அங்கே வந்தன. மரத்திற்கு ஒரு கிளியாக அமர்ந்த போது ஐந்து கிளிகளுக்கு அமர மரம் கிடைக்கவில்லை. மரத்திற்கு இரண்டு கிளிகளாக அமர்ந்த போது உட்காரக் கிளிகள் இல்லாமல் ஐந்து மரங்கள் மீதம் இருந்தன. கிளிகள் எத்தனை, மரங்கள் எத்தனை?

5. ஒரு தந்தையின் தற்போதைய வயது அவரது மகனின் வயதைப் போல மூன்று மடங்கு. பத்து வருடங்களுக்கு முன்னால் அவரது வயது, மகனின் வயதைப்போல ஐந்து மடங்காக இருந்தது. அப்படியானால் மகனின் வயது என்ன, தந்தையின் வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com