NETS: பொங்கல் விழா
ஃபிப்ரவரி 1, 2014 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் (NETS) பொங்கல் விழா, லிட்டில்டனில் (மாசசூஸட்ஸ்) கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளில் சிறார் மட்டுமன்றிப் பெரியோரும் பங்குபெற்று மகிழ்வித்தனர்.

சிசு பாரதி மாணவர்கள் மூலம் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கும் நாடகத்தை நகைச்சுவையுடன், நையாண்டிப் பாடல்களோடு எழுதி, வடிவமைத்திருந்தார் திருமதி. உமா நெல்லையப்பன். இனியா, லையா, அஷ்மிதா, அக்ஷயா, கேசவ், சூர்யா, ஜனனி, அமியா, வர்ஷிணி, சிந்து, ஹரிணி, ஹம்சா மற்றும் சஞ்சனா பங்கேற்று திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஆகியோரின் கல்வி தொடர்பான கருத்துக்களை மேற்கோள்களாக எடுத்துரைத்து, சிறப்பாக நடித்துக் கரவொலி பெற்றனர். தொடர்ந்து சிறுவர் சிறுமியர் நாட்டியங்கள், நாடகங்கள் மற்றும் பாடல்கள் என்று அரங்கத்தினரைக் களிப்படையச் செய்தன. பெரியவர்கள் ஆடிய விறுவிறுப்பான ஆட்டம் வெகு சிறப்பு.

ஆனந்தி ராஜமாரிசாமி,
ஃப்ரேமிங்டன், மாசசூசட்ஸ்.

© TamilOnline.com