தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு In Our Translated World என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

மொழிபெயர்த்தோர்: எம்.எல்.தங்கப்பா (இந்தியா), அனுசியா ராமஸ்வாமி (அமெரிக்கா), மைதிலி தயாநிதி (கனடா)
பிரதி மேம்படுத்துநர்: செல்வா கனகநாயகம் (கனடா)

Ontario Trillium Foundation நிதியுதவியுடன் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்படும். புத்தக வெளியீட்டு விழாவில் சிகாகோ பல்கலைக் கழகப் பேராசிரியர் சாஷா எபெலிங் அவர்கள் பிரதம விருந்தாளியாகக் கலந்துகொண்டு உரையாற்றுவார். விழா அரங்கில் இந்நூல் விற்கப்படும். amazon.com, amazon.ca, iTunes ஆகிய இணைய விற்பனை தளங்களில் அச்சுப் புத்தகமாகவும், மின்நூலாகவும் இது கிடைக்கும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com