டாலஸ் தமிழ்ச் சங்கம்: நிர்வாகிகள் தேர்வு
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் 2014-15ம் ஆண்டுக்கான தலைவராக, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கவிஞர் கண்ணதாசனின் மகள் வயிற்றுப் பேரன் சுப்ரமணியனை மணந்த இவர், டாலஸில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் தன்னார்வ ஆசிரியையாகப் பணியாற்றுவதுடன், சமூகப் பணிகளிலும் பங்கேற்கிறார்.

பிற நிர்வாகிகள்:
திருமதி. கஸ்தூரி கோபிநாத் - செயலாளர்
திருமதி. தமிழ்மணி கமலநாதன் - பொருளாளர்
திரு. பால்பாண்டியன் - புரவலர்

தற்போதைய தலைவர் கலைச்செல்வி கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்தார். தற்போதைய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்குப் புரவலர் பால்பாண்டியன் நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகளின் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து சிங்கர் பிரபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சின்னமணி,
டாலஸ்

© TamilOnline.com