ஒரே தூற்றல்
கி.வா.ஜ. தலைமையில் ஒரு இலக்கியக் கூட்டம். இரு அணியினரும் மாறிமாறி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் விவாதம் வலுத்து சண்டையாகி விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். கி.வா.ஜ. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்தார்ர். உடன் சில நண்பர்களும் அவருடன் வெளியே வந்தனர்.

வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அதைப் பார்த்த கி.வா.ஜ., சொன்னார் "ம்ம்ம்ம்.... உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்..."

'கி.வா.ஜ.வின் சிலேடைகள்' நூலிலிருந்து

© TamilOnline.com