கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையம் இந்த ஆண்டு 'துறைதோறும் கம்பன்' என்ற பொதுத்தலைப்பில் கீழ் (கம்பனில் இறையியல், கம்பனில் மானுடவியல் என்பன போன்ற) துறைவாரியான கட்டுரைகளைச் சமர்ப்பிக்கக் கேட்டுள்ளது. இதற்கான ஆராய்ச்சிக் கருத்தரங்கம் மார்ச் 15, 2014 அன்று காரைக்குடியில் துவங்கவுள்ளது. இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்குப் பதிவு செய்துள்ள மாணவர்கள் பேராளர்களாகப் பங்கேற்றுத் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வரவேற்கப்படுகின்றனர். இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கம்பன் தமிழ் ஆய்வுக்கோவை என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு:
மின்னஞ்சல் - kambantamilcentre@gmail.com
வலைப்பக்கம்: kambantamilcentre.blogspot.in
தொலைபேசி - 9445022137, 9442913985

பேராளர்கள் பிப்ரவரி 1ம் தேதிவரை பதிவு செய்துகொள்ளலாம்.

குறிஞ்சிவேந்தன்,
காரைக்குடி

© TamilOnline.com