துல்சா: கந்தசஷ்டி விழா
நவம்பர் 9, 2013 அன்று ஓக்லஹோமா மகாணத்தில் உள்ள துல்சா நகரில் அமைந்துள்ள மகாலட்சுமி திருக்கோவிலில் கந்தசஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 250 பக்தர்கள் கலந்துகொண்டு 108 பால்குடம் மற்றும் காவடி எடுத்தார்கள். அபிஷேகம், அலங்காரம் செய்து சுவாமியை ஊர்வலமாகக் கொணர்ந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

வைத்தியநாதன் சுப்ரமணியன்,
துல்சா, ஓக்லஹாமா

© TamilOnline.com