மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி கலிஃபோர்னியா, மிச்சிகன் விஜயம்
நவம்பர் 18, 2013 முதல் 29ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி, கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுதமொழி: "இறைவனிடம் காட்டும் பக்தி என்பது, அனைத்து உயிரினங்களிடமும் நாம் காட்டும் அன்பாகும். இதில்லாமல், வெறும் பிராத்தனை மட்டும் செய்வது பக்தியல்ல. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவரல்ல. நம் எல்லோருடைய உள்ளத்தின் உள்ளேயும் அவர் வசிக்கிறார். இந்த மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும். அதற்குப் பணிவு மிகவும் அவசியம். இதற்காக நாம் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும் - அது அகம்பாவத் தியாகம். இந்த அகம்பாவமே அனைத்திற்கும் தடையாக இருக்கிறது. இதை துறப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்."

மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org/activity

மேலும் விபரங்களுக்கு:
வலைமனை: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com