டாலஸ்: மதுர உற்சவம்
2013 நவம்பர் 23 முதல் 30ம் தேதிவரை டாலஸ் நகரில் உலகத் தெய்வீக அமைப்பின் (Global Organization for Divinity) சார்பில் 7 நாட்கள் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் அருளாசிகளுடன், ஸ்ரீ ராமானுஜம் அவர்களின் உபன்யாசம் மதுர உற்சவமாகக் கொண்டாடப்பட்டது.

காலையில் ஸ்ரீ மாதுரி சகி சமேத பிரேமிக வரதனுக்கு திருமஞ்சனமும், ஸ்ரீமத் பாகவத பாராயணமும், மதிய வேளைகளில் அஷ்டபதியும், மாலையில் ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும், இரவில் வாகனப் புறப்பாடும், திவ்யநாம சங்கீர்த்தனமும் பக்தியுடன் நிகழ்த்தப்பட்டன. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ராமானுஜம் அவர்களின் உபன்யாசத்தையும், உற்சவத்தையும் கண்டு மகிழ்ந்தனர். ஏழாவது நாளன்று ராதா கல்யாணம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஜெயந்தி மாயா,
டாலஸ்

© TamilOnline.com