விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா
அக்டோபர் 5, 2013 அன்று கனடாவில் தமிழ் முதியோருக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனமான விலா கருணா தனது பத்தாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இதைத் தொடங்கி, தலைமைப் பொறுப்பு வகிக்கும் திருமதி. இந்திராணி நாகேந்திரம் வரவேற்றுப் பேசினார். விழாவில் ஆடல், பாடல், நாடகம் மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றன. முதியோரின் கோலாட்ட நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒன்ராறியோ அமைச்சரும் சட்டசபை உறுப்பினருமான பிராட் டுகியுட், சட்டசபை உறுப்பினர் பாஸ் பல்கிஸன், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி ஆகியோர் கலந்துகொண்டு விலா கருணாவின் சேவையைப் பாராட்டிப் பேசினர். முதியோர்களுக்கான கவிதை, கட்டுரை சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய போசனத்தின் பின்னர் விழா இனிது நிறைவடைந்தது.

அ. முத்துலிங்கம்,
டொராண்டொ, கனடா

© TamilOnline.com