BATM: மெல்லிசை நிகழ்ச்சி
அக்டோபர் 19, 2013 அன்று, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய 'அன்றுமுதல் இன்றுவரை' மெல்லிசை நிகழ்ச்சி ஃப்ரீமான்ட்டில் (கலிஃபோர்னியா) உள்ள இர்விங்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதை சஹானா இசைக் குழுவினர் வழங்கினர். தலைப்புக்கேற்ப மெல்லிசை மன்னரின் மெட்டுக்களில் தொடங்கி இசைஞானியின் இன்னிசையில் நனைந்து ரஹ்மானின் ராகங்களில் செவி இனித்தது. சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரும் இசைமழையில் நனைந்து மேடையேறி நடனம் ஆடினர்.

தமிழ் மன்றம் நடத்திய பாட்டுப் பாடவா போட்டியில் வென்ற நான்கு குழந்தைகள் சஹானா இசைக் குழுவோடு மேடையில் இணைந்து பாடும் வாய்ப்புப் பெற்றனர். இவர்களுக்குப் பரிசுகளும், போட்டி நடுவர்கள் மற்றும் சஹானா இசைக் குழுவினருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவின் சிறப்பு அம்சமாக திரு. தயா மற்றும் திரு. ரமேஷ் அவர்கள் கமல் 'அப்பு' மற்றும் சாப்ளின் போல் மாறுவேடமிட்டு வந்து அமர்க்களப்படுத்தினார்கள்.

திருமதி. உஷா ராஜு,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com