இஷா இசை: 'என்றென்றும் ராஜா'
அக்டோபர் 19, 2013 அன்று "என்றென்றும் ராஜா" என்னும் இஷாவின் இன்னிசை நிகழ்ச்சி ஃப்ரமிங்காம், கீப்டெக் உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. வாத்தியக் குழுவினர் தமிழ் வாடையே அறியாதவர்கள் என்றபோதும் இசைக்கு மொழியில்லை என்பதைத் தமது வாசிப்பில் நிரூபித்தனர். இளையராஜாவின் இனிய பாடல்களான, "என் இனிய பொன் நிலாவே", "பொத்திவச்ச மல்லிகை மொட்டு", "மச்சானைப் பார்த்தீங்களா", "என்னம்மா கண்ணு சௌக்கியமா", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "இதழில் கதை எழுதும் நேரமிது" போன்ற பாடல்கள் கைதட்டலை அள்ளிச் சென்றன. இஷா தொண்டு நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி படிப்பறிவில்லாத இந்தியக் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரோஜ் பமீலா,
ஃப்ரமிங்காம், மாசசூசெட்ஸ்

© TamilOnline.com