அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச் சங்கம் திருச்சிற்றம்பலம் நாட்டியப் பள்ளியுடன் இணைந்து அமரர் கல்கியின் அழியாக் காவியமான 'சிவகாமியின் சபத'த்தை நீங்கள் கண்டு களிக்கக் கொண்டுவருகிறார்கள். புகழ்பெற்ற நடனக் கலைஞர்களான திரு. மதுரை முரளிதரன், திருமதி. தீபா மகாதேவன் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த நாவலை நாட்டிய நாடகமாக வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 27, 2013 அன்று ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரி அரங்கில் பகல் 2:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் தொடர்ந்து இரண்டு முறை அரங்கேறவிருக்கிறது. ஏராளமான நாட்டியக் கலைஞர்கள், அற்புதமான மேடை அமைப்புகள், சிறப்பான இசை ஆகியவை ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான ஒரு கலை விருந்தாக இருக்கும். ஏமாற்றத்தைத் தவிர்க்க இப்பொழுதே சீட்டுக்களை முன்பதிவு செய்துவிடுங்கள்.

நிகழ்ச்சியைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் டிக்கெட்டுகளுக்கும் தொடர்பு கொள்ள:

வெங்கடேஷ் பாபு - 925.858.2392
முத்துகுமார் - 408-373-1977
உஷா அரவிந்தன் - 510-366-5214
உமேஷ் - 510-386-2273.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com