இயல் இசை நாட்டியம்
ஆகஸ்ட் 8, 2013 அன்று சான் ஹோசே மெக்சிகன் ஹெரிடேஜ் மையத்தில் 'இயல் இசை நாட்டியம்' நிகழ்ச்சியை வழங்கியது. இதில் இசைக்கவி ரமணன் அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் இசைக் கவிகள் சேர்ந்த அற்புதமான சொற்பொழிவை ஆற்றினார். வளைகுடாப்பகுதியைச் சேர்ந்த இளம் இசைக்கலைஞர் மாளவிகா ஸ்ரீராம் 'சங்கீத ராமாயணம்' நிகழ்ச்சியைப் பக்க வாத்தியக் குழுவினருடன் சேர்ந்து வழங்கினார். கர்நாடக இசை கலந்த உபன்யாசமாக இது இருந்தது. வீணை: ஹ்ரிதிகேஷ் சாரி, வயலின்: பார்த்திவ் மோகன், மிருதங்கம்: நடராஜன் ஆகியோர் சிறப்பாக வாசித்தனர். இறுதியாக, பிரபல நாட்டியக் கலைஞர் திருமதி. ராதிகா கிரி குழுவினர் வழங்கிய 'முருகனின் மறுபெயர் அழகு' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது. மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்குத் திருமதி. கௌரி சேஷாத்ரி நினைவஞ்சலி வழங்கினார்.



© TamilOnline.com