சாய்பாபா


அவதார புருடராக மண்ணில் தோன்றி மக்களுக்காக உழைத்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் திலீப் பாபாவாகத் தோன்றுகிறார். கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார். பாபா வேடத்திற்காகப் பல நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குநர் ராமகிருஷ்ணா, இறுதியில் திலீப்பை தேர்வு செய்திருக்கின்றார். பாபாவின் இருபதாவது வயதுமுதல் அவர் மகாசமாதி அடைந்த வரையிலான நிகழ்வுகளைப் படத்தில் சித்தரிக்க உள்ளனர். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் புட்டபர்த்தி மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக திலீப் விரதம் இருக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com