விழி மூடி யோசித்தால்...


ஊமைப் பெண்ணைக் காதலித்து மணக்க எண்ணுகிறான் கதாநாயகன். ஆனால் திடீரென மர்மமாக அவள் கொல்லப்படுகிறாள். கொலை செய்தது யார்? ஏன்? என்பவற்றைக் கல்லூரி, காதல் மற்றும் த்ரில் கலந்து சொல்ல வருகிறது விழி மூடி யோசித்தால். அமெரிக்காவில் குறும்படங்களை இயக்கிப் புகழ்பெற்ற கே.ஜி. செந்தில்குமார் இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நிகிதா, பானுஸ்ரீ மெஹரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஊர்வசி, பாலாசிங், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலை, பெங்களூர் நெடுஞ்சாலை எனப் பெரும்பகுதி நெடுஞ்சாலைகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com