அரசியலில் குதிக்கும் கார்த்திக்
விஜயகாந்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கும் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.

பிஸ்வாஸ் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கொல்கத்தா சென்றுள்ள கார்த்திக் அம்மாநாட்டில் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியைப் பெறலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்பதவியில் உசிலம்பட்டித் தொகுதி எம்.எல்.ஏ. சந்தானம் இருக்கிறார்.

கார்த்திக் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியன்று தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தக் கார்த்திக் பசும்பொன் கிராமத்துக்குச் சென்றார். அதே நாளில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை.

கொல்கத்தா மாநாட்டிற்குப் பிறகே கார்த்திக் ·பார்வர்டு பிளாக்கில் தன்னை இணைத்துக்கொள்வாரா அல்லது தனிக் கட்சி தொடங்குவாரா என்பது தெளிவாகும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com