பிரம்மபுத்திரா


சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வருகிறார்கள் இரு நண்பர்கள். அவர்களின் வாழ்வில் பரபரப்பான பல சம்பவங்கள் நடக்கின்றன. ஒருவர் தன் லட்சியத்திலிருந்து மாறினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது பிரம்மபுத்திரா. முரளி, அக்ஷா, ரோஷி, கங்கேஷ் ஆகிய புதுமுகங்கள் நாயக, நாயகிகளாக நடிக்கின்றனர். உதயதாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "கலிங்கா' படத்தை இயக்கிய தாமஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கோடம்பாக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகிறது.

அரவிந்த்

© TamilOnline.com