சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 28, 2013 அன்று சாண்டியேகோ தமிழ்ச் சங்கத்தினர் டெல் நார்ட்டே உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர். அப்பொழுது, தமிழ்த் தேர்வு எழுதிய மற்றும் பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழாவின் சிறப்பு அம்சமாகக் கலகலக்க வைத்தது அடடே க்ரியேஷன்ஸின் 'விண்ணையும் தாண்டி சினிமாவா' என்ற நகைச்சுவை நாடகம். விண்ணகத்திலும் மண்ணகத்திலும் நடப்பதாக வரும் இந்த நாடகத்தை எழுதியவர் ஜெயந்தி ஸ்ரீதர். அமெச்சூர் நடிகர்களே நடித்திருந்த போதும் நடிப்பு, ஒப்பனை, மேடையமைப்பு என எல்லாமே வெகு சிறப்பாக அமைந்திருந்தன. நாடகத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

பன்னீர் செல்வம் நாடகத்தை அறிமுகப்படுத்திப் பேசினார். தமிழ்ச் சங்க உறுப்பினர் மட்டுமல்லாத சுற்றுவட்டாரத்தின் தமிழரும் வந்திருந்து நாடகத்தை ரசித்தனர்.

தகவல்: ஜெயபாண்டியன் கோட்டாளம்
படம்: ஸ்ரீனிவாசன் சதாசிவம்

© TamilOnline.com